கோவை வெள்ளலூர் காப்பகத்திற்குள் புகுந்து பெண்களை மிரட்டிய வழக்கறிஞர் கைது!

கோவை வெள்ளலூர் காப்பகத்திற்குள் குடிபோதையில் புகுந்து பெண்களை ஒருமையில் பேசி மிரட்டிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: வெள்ளலூர் காப்பகத்திற்குள் குடிபோதையில் புகுந்து பெண்களை ஒருமையில் பேசி மிரட்டிய வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை காந்திபார்க் சலீவன் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35) வழக்கறிஞர். கடந்த 10 நாட்களுக்கு முன் செந்தில்குமாருக்கு அவரது மனைவி சவுமியாவிற்கு ஏற்பட்ட கருத்துவேறு காரணமாக பேரூர் போலீசார் சவுமியாவை கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தாயகம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

மீண்டும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மீண்டும் சவுமியா பாதுகாப்பு கருதி அதே இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று குடிபோதையில் இல்லத்திற்கு வந்த செந்தில்குமார் காப்பக இல்லத்தில் இருந்த அவரது மனைவி மற்றும் மற்ற பெண்களை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து காப்பகத்தின் செயலாளர் லெலிமேரி சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் செந்தில்குமாரை அழைத்துச் சென்றனர். மேலும் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...