கோவை வெள்ளலூர் காப்பகத்திற்குள் புகுந்து பெண்களை மிரட்டிய வழக்கறிஞர் கைது!

கோவை வெள்ளலூர் காப்பகத்திற்குள் குடிபோதையில் புகுந்து பெண்களை ஒருமையில் பேசி மிரட்டிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: வெள்ளலூர் காப்பகத்திற்குள் குடிபோதையில் புகுந்து பெண்களை ஒருமையில் பேசி மிரட்டிய வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை காந்திபார்க் சலீவன் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35) வழக்கறிஞர். கடந்த 10 நாட்களுக்கு முன் செந்தில்குமாருக்கு அவரது மனைவி சவுமியாவிற்கு ஏற்பட்ட கருத்துவேறு காரணமாக பேரூர் போலீசார் சவுமியாவை கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தாயகம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

மீண்டும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மீண்டும் சவுமியா பாதுகாப்பு கருதி அதே இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று குடிபோதையில் இல்லத்திற்கு வந்த செந்தில்குமார் காப்பக இல்லத்தில் இருந்த அவரது மனைவி மற்றும் மற்ற பெண்களை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து காப்பகத்தின் செயலாளர் லெலிமேரி சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் செந்தில்குமாரை அழைத்துச் சென்றனர். மேலும் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...