கோவை வெள்ளலூர் காப்பகத்திற்குள் புகுந்து பெண்களை மிரட்டிய வழக்கறிஞர் கைது!

கோவை வெள்ளலூர் காப்பகத்திற்குள் குடிபோதையில் புகுந்து பெண்களை ஒருமையில் பேசி மிரட்டிய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: வெள்ளலூர் காப்பகத்திற்குள் குடிபோதையில் புகுந்து பெண்களை ஒருமையில் பேசி மிரட்டிய வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை காந்திபார்க் சலீவன் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35) வழக்கறிஞர். கடந்த 10 நாட்களுக்கு முன் செந்தில்குமாருக்கு அவரது மனைவி சவுமியாவிற்கு ஏற்பட்ட கருத்துவேறு காரணமாக பேரூர் போலீசார் சவுமியாவை கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள தாயகம் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்துள்ளனர்.

மீண்டும் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், மீண்டும் சவுமியா பாதுகாப்பு கருதி அதே இல்லத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று குடிபோதையில் இல்லத்திற்கு வந்த செந்தில்குமார் காப்பக இல்லத்தில் இருந்த அவரது மனைவி மற்றும் மற்ற பெண்களை ஒருமையில் பேசி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து காப்பகத்தின் செயலாளர் லெலிமேரி சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார் செந்தில்குமாரை அழைத்துச் சென்றனர். மேலும் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...