கோவையில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

கோவை இடையர்பாளையம் - கவுண்டம்பாளையம் சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்.


கோவை: இடையர்பாளையம் -கவுண்டம்பாளையம் சாலையில் நடைபெற்ற சாலை விபத்து குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் இடையர்பாளையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இடையர்பாளையம் -கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள ஜோதி பொன்னையா திருமண மண்டபம் அருகே வந்த போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், சதீஷ் வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சதீஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...