கோவையில் இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

கோவை இடையர்பாளையம் - கவுண்டம்பாளையம் சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்.


கோவை: இடையர்பாளையம் -கவுண்டம்பாளையம் சாலையில் நடைபெற்ற சாலை விபத்து குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை இடையர்பாளையத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் இடையர்பாளையத்தில் இருந்து கவுண்டம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் இடையர்பாளையம் -கவுண்டம்பாளையம் சாலையில் உள்ள ஜோதி பொன்னையா திருமண மண்டபம் அருகே வந்த போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், சதீஷ் வாகனம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சதீஷை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...