கோவையில் ஜன.1 முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஊதியம் - மாமன்றத்தில் தீர்மானம்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதியமாக ரூ.648.33 வழங்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே ஊதியமாக ரூ.440 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.721 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்றும், அவர்களது நலனை கருத்தில் கொண்டும் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் ரூ.648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்து வார்டு கவுன்சிலர்களும் ஏற்றதையடுத்து மேயரால் இந்த தீர்மானம் அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஊதிய உயர்வு தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.648.33 ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வானது, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...