கோவையில் ஜன.1 முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு புதிய ஊதியம் - மாமன்றத்தில் தீர்மானம்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் ஊதியமாக ரூ.648.33 வழங்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாநகராட்சியில் கடந்த சில மாதங்களாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே ஊதியமாக ரூ.440 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.721 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை ஏற்றும், அவர்களது நலனை கருத்தில் கொண்டும் ஊதிய உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் ரூ.648 என சம்பளத் தொகையை உயர்த்தி வழங்கிட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்து வார்டு கவுன்சிலர்களும் ஏற்றதையடுத்து மேயரால் இந்த தீர்மானம் அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் அரசுக்கு கருத்துரு அனுப்புவதாக உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஊதிய உயர்வு தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.648.33 ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஊதிய உயர்வானது, வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல், அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...