கோவையில் வேளாண் வளர்ச்சி திட்ட விளக்கச் சிறப்பு பிரச்சார ஊர்திகளை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்

ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விளக்க சிறப்பு பிரச்சார ஊர்திகளை ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி, தன்னிறைவான கிராமத்தை உருவாக்கும் நோக்கில், கடந்த மே மாதம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள சுமார் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன.



கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல். மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தல், ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக பண்ணை குட்டை அமைத்தல், கூட்டுறவு சங்கங்களின் மூலம் அதிக பயிர் கடன்கள் வழங்குதல். பாசன நீர் வழித் தடங்களை தூர்வாருதல், உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்காக உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் வரும்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் சார்பாக மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்த வாகனங்களில் சிறுதானிய பயிர்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விளைவிக்கும் பொழுது அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விளக்க பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சௌமியா, வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணவேணி, பெருமாள் சாமி, உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...