கோவையில் வேளாண் வளர்ச்சி திட்ட விளக்கச் சிறப்பு பிரச்சார ஊர்திகளை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்

ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விளக்க சிறப்பு பிரச்சார ஊர்திகளை ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி, தன்னிறைவான கிராமத்தை உருவாக்கும் நோக்கில், கடந்த மே மாதம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள சுமார் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன.



கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல். மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தல், ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக பண்ணை குட்டை அமைத்தல், கூட்டுறவு சங்கங்களின் மூலம் அதிக பயிர் கடன்கள் வழங்குதல். பாசன நீர் வழித் தடங்களை தூர்வாருதல், உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்காக உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் வரும்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் சார்பாக மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்த வாகனங்களில் சிறுதானிய பயிர்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விளைவிக்கும் பொழுது அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விளக்க பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சௌமியா, வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணவேணி, பெருமாள் சாமி, உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...