திருப்பூரில் பழைய வேஸ்ட் குடோனில் திடீர் தீ விபத்து - ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதம்

பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த பழைய பொருட்கள் குடோனில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையான நிலையில், விளக்கு அல்லது பட்டாசால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த போயம்பாளையம் பகுதியில் இரும்புக்கடை நடத்தி வருபவர் ஶ்ரீ ராம். மேலும் அதே பகுதியில் இவருக்கு சொந்தமாக பழைய பொருட்களை சேமித்து வைக்கும் குடோன் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில் நேற்றிரவு ஏழு மணியளவில், அந்த குடோனிலிருந்து புகை வந்துள்ளது. பின்பு திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக அருகிலிருந்தவர்கள் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.



இதன் அடிப்படையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் 2 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து குறித்து குடோன் உரிமையாளர் கூறியதாவது, குடோனை இரவு நேரம் பயன்படுத்தாத காரணத்தால் குடோனில் மின் இணைப்பு இல்லை. நேற்று கார்த்திகை தீபம் என்பதால் அருகிலுள்ள வீடுகளிலிருந்து விளக்கோ அல்லது பட்டாசோ விழுந்து தீப்பிடித்திருக்கலாம்.

இந்த தீ விபத்தின் காரணமாக குடோனில் இருந்த கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்து உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...