கோவையில் ஆந்தை இனங்களை பாதுகாக்க 200 செயற்கை கூண்டுகள் அமைக்க திட்டம்.

உலக பல்லுயிர் தின விழாவை முன்னிட்டு, கோவை சிங்காநல்லூர் குளத்தில், மாவட்ட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.


கோவை: உலக பல்லுயிர் தின விழாவை முன்னிட்டு,

கோவை சிங்காநல்லூர் குளத்தில்,

மாவட்ட வனத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜி எஸ் சமீரன் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சிங்காநல்லூர் குளக்கரையில் இருக்கும் மருத்துவ குணம் கொண்ட தாவரங்கள் பற்றி வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவன இயக்குனர் டாக்டர் குஞ்சு கண்ணன் விளக்கமளித்தார். மேலும், அதிகரித்து வரும் நகரமயமாதல் காரணமாக உணவுச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கும் ஆந்தை இனங்கள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய இடம் இல்லாத சூழ்நிலை உள்ளது என்பதை விளக்கினார்.



இதை கருத்தில் கொண்டு, ஆந்தை இனங்களுக்கான செயற்கை கூடு அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் துவக்கி வைத்தார்.

பின்னர், இது குறித்து மாவட்ட ஆட்சியர் பேசுகையில், "கோவை மாநகரின் இயற்கை சமநிலையை சீராக வைப்பதில் சிங்காநல்லூர் குளம் முக்கிய பங்கு வகிக்கிறது. நகரின் மத்தியில் அமைந்திருக்கும் போதும், இந்த குளம் பல லட்சக்கணக்கான பல்லுயிர்கள் வாழும் இடமாக திகழ்கிறது. உணவுச் சங்கிலியை சீராக வைக்கிறது. இந்த இடத்தில் பல்லுயிர் தினம் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது", என்றார்.



எலி போன்ற விலங்குகளை கட்டுப்படுத்தி, உணவுச் சங்கிலியை சமநிலையில் வைத்து மனிதர்களுக்கு உதவக்கூடிய ஆந்தைகளுக்கு செயற்கை கூடு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிகழ்ச்சியில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஆந்தைகளை பாதுகாக்கும் நோக்கில் மாநகர் முழுவதும் அடுத்த நான்கு மாதத்திற்குள் 200 செயற்கை கூண்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விழா அமைப்பாளர்கள், தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வின் போது, வன மரபியல் மற்றும் மரபெருக்கு நிறுவன இயக்குனர் டாக்டர் குஞ்சு கண்ணன், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், சலீம் அலி பறவைகள் மைய விஞ்ஞானி பாபு, நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு கல்வி மைய உறுப்பினர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...