கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அவரை ஆயுதங்களில் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள் அவரை அரிவாள் போன்ற ஆயுதங்களில் தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22), புதன்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் தனது வீட்டில் கழுத்தில் கத்திக்குத்து மற்றும் உடலில் பல்வேறு வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார், அஸ்வினின் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்ததடயவியல் நிபுணர்கள், ரத்த மாதிரிகள், ஆயுத தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்தனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும், கொலையில் ஈடுபட்ட நபர்கள் கொலையை வீடியோ பதிவாக இணையத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22), புதன்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் தனது வீட்டில் கழுத்தில் கத்திக்குத்து மற்றும் உடலில் பல்வேறு வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார், அஸ்வினின் உடலை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்ததடயவியல் நிபுணர்கள், ரத்த மாதிரிகள், ஆயுத தடயங்கள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்தனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு விசாரணையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும், கொலையில் ஈடுபட்ட நபர்கள் கொலையை வீடியோ பதிவாக இணையத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து வாலிபர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.