கோவையில் ஓய்வு பெற்ற ஆட்சியர் உதவியாளர் வீட்டில் நகைகள் மாயம்…!

சம்பவம் தொடர்பாக அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வீட்டு வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் சொர்ணகுமாரி (78). இவர் கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

கோவைப்புதூரில் தனியாக வசித்து வந்த சொர்ணகுமாரி, வீட்டு வேலையை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் திருச்சியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு சேர்த்தார். அந்த பெண் பணிக்கு சேர்ந்த 4 நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார்.

சம்பவத்தன்று, சொர்ணகுமாரி வீட்டில் இருந்த பீரோ சாவியும் மாயமாகியிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 5 பவுன் தங்க நகை திருட்டுப் போயிருந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த சொர்ணகுமாரி இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், வீட்டு வேலைக்கார பெண் கவிதா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...