சம்பவம் தொடர்பாக அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வீட்டு வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் சொர்ணகுமாரி (78). இவர் கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
கோவைப்புதூரில் தனியாக வசித்து வந்த சொர்ணகுமாரி, வீட்டு வேலையை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் திருச்சியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு சேர்த்தார். அந்த பெண் பணிக்கு சேர்ந்த 4 நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார்.
சம்பவத்தன்று, சொர்ணகுமாரி வீட்டில் இருந்த பீரோ சாவியும் மாயமாகியிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 5 பவுன் தங்க நகை திருட்டுப் போயிருந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த சொர்ணகுமாரி இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், வீட்டு வேலைக்கார பெண் கவிதா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவைப்புதூரில் தனியாக வசித்து வந்த சொர்ணகுமாரி, வீட்டு வேலையை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் திருச்சியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு சேர்த்தார். அந்த பெண் பணிக்கு சேர்ந்த 4 நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார்.
சம்பவத்தன்று, சொர்ணகுமாரி வீட்டில் இருந்த பீரோ சாவியும் மாயமாகியிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 5 பவுன் தங்க நகை திருட்டுப் போயிருந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த சொர்ணகுமாரி இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், வீட்டு வேலைக்கார பெண் கவிதா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.