பணி வழங்காவிட்டால் 8 ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்: மக்கள் நலப் பணியாளர்கள் அறிவிப்பு!

முதல்வர் அறிவித்தபடி பணி வழங்காவிட்டால் வரும் 8ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது.



இச்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை பணி வழங்கப்படவில்லை. வயது முதிர்வு காரணமாக மக்கள் நலப் பணியாளர்கள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



எனவே மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி பணி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லை என்றால் ஜூன் 8ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் நலப் பணியாளர்களை ஒன்று திரட்டி சென்னையில் பணி வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் நலப் பணியாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...