பணி வழங்காவிட்டால் 8 ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்: மக்கள் நலப் பணியாளர்கள் அறிவிப்பு!

முதல்வர் அறிவித்தபடி பணி வழங்காவிட்டால் வரும் 8ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.


கோவை: தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது.



இச்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை பணி வழங்கப்படவில்லை. வயது முதிர்வு காரணமாக மக்கள் நலப் பணியாளர்கள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



எனவே மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி பணி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லை என்றால் ஜூன் 8ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் நலப் பணியாளர்களை ஒன்று திரட்டி சென்னையில் பணி வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் நலப் பணியாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...