பேருந்து நிலையத்தில் இருந்த நாவல் மரத்தின் கிளை முறிந்து பேருந்தின் மீது விழுந்ததில், பேருந்தின் முன்பகுதி கண்ணாடி சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தில், பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோவை: கோவை காந்திபுரம் உள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று கோவை காந்திபுரத்தில் இருந்து வாளையார் வரை செல்லும் 96-எண் அரசுப்பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது.
அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த நாவல் மரத்தின் கிளை ஒன்று முறிந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி கண்ணாடி சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு விழுந்த மரக்கிளைகள் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பின்னர், அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. எதிர்பாராதவிதமாக, பேருந்து மீது மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த நாவல் மரத்தின் கிளை ஒன்று முறிந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி கண்ணாடி சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு விழுந்த மரக்கிளைகள் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பின்னர், அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. எதிர்பாராதவிதமாக, பேருந்து மீது மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.