பொள்ளாச்சி வடக்கு உள்வட்ட ஜமாபந்தியில் பெறப்பட்ட 101 மனுக்களில் 27 மனுக்கள் மீது உடனடி தீர்வு: வருவாய்த் துறையினர் தகவல்!

பொள்ளாச்சியில் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 101 மனுக்களில் 27 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், நேற்று 2வது நாளாக வடக்கு உள் வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த ஜமாபந்தியில், வடக்கு உள் வட்டத்திற்கு உட்பட்ட சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், காபிலிபாளையம், பொள்ளாச்சி நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, நத்தம் பட்டா, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 101 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 27 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது பரிசீலனை செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...