பொள்ளாச்சி வடக்கு உள்வட்ட ஜமாபந்தியில் பெறப்பட்ட 101 மனுக்களில் 27 மனுக்கள் மீது உடனடி தீர்வு: வருவாய்த் துறையினர் தகவல்!

பொள்ளாச்சியில் ஜமாபந்தியில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 101 மனுக்களில் 27 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், நேற்று 2வது நாளாக வடக்கு உள் வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரேசுபம் ஞானதேவ் ராவ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்த ஜமாபந்தியில், வடக்கு உள் வட்டத்திற்கு உட்பட்ட சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், காபிலிபாளையம், பொள்ளாச்சி நகர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, நத்தம் பட்டா, இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 101 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 27 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது பரிசீலனை செய்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...