108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனியார் நிறுவன ஊழியர்கள் கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
கோவை: கோவை கே. ஜி சாவடி ராஜேந்திர பிரசாத் வீதியை சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.
இன்று காலை வழக்கம்போல் சண்முகம் பணிக்கு வந்துள்ளார். பணிக்கு வந்து சிறிது நேரத்திலேயே திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரது மனைவி விஜி மற்றும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக, அங்கு வந்த 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனியார் நிறுவன ஊழியர்கள் கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார் சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணிக்கு வந்த காவலர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை வழக்கம்போல் சண்முகம் பணிக்கு வந்துள்ளார். பணிக்கு வந்து சிறிது நேரத்திலேயே திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரது மனைவி விஜி மற்றும் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக, அங்கு வந்த 108 ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் அவரை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, தனியார் நிறுவன ஊழியர்கள் கே.ஜி சாவடி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் அங்கு வந்த போலீசார் சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணிக்கு வந்த காவலர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.