கொரோனா காலத்தில் போதிய வேலை மற்றும் வருமானம் இல்லாததால், நண்பர் மூலம் பேசி பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை தடாகம் அருகே ரோந்தின் போது காரில் கடத்திச் சென்ற 224.8 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், தடைசெய்யப்பட்ட போதை பொருளை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில இளைஞர்களை கைது செய்தனர்.
கோவை தடாகம் அருகே போலீசார் வாகன சோதனையில் இன்றுஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவில்பாளையத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் (22), மதன் சிங் (22), இந்தர் குமார் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

முதல்கட்ட விசாரணையில், லட்சுமணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குரும்பபாளையம் பகுதியில் மளிகை கடையில், மதன் சிங்குடன் வேலை பார்த்து வந்ததாகவும், கொரோனா காலத்தில் போதிய வேலை மற்றும் வருமானம் இல்லாததால், நண்பர் மூலம் பேசி பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதற்காக மூவரும் கோவில்பாளையத்தில் அறை எடுத்து தங்கி, சுமார் 4 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை வாங்கி குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்பலம் ஆகியுள்ளது.

இதையடுத்து, அவர்களிடமிருந்த 224.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த போலிசார் மூவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை தடாகம் அருகே போலீசார் வாகன சோதனையில் இன்றுஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவில்பாளையத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் (22), மதன் சிங் (22), இந்தர் குமார் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில், லட்சுமணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குரும்பபாளையம் பகுதியில் மளிகை கடையில், மதன் சிங்குடன் வேலை பார்த்து வந்ததாகவும், கொரோனா காலத்தில் போதிய வேலை மற்றும் வருமானம் இல்லாததால், நண்பர் மூலம் பேசி பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.
இதற்காக மூவரும் கோவில்பாளையத்தில் அறை எடுத்து தங்கி, சுமார் 4 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை வாங்கி குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்பலம் ஆகியுள்ளது.
இதையடுத்து, அவர்களிடமிருந்த 224.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த போலிசார் மூவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.