கோவை தடாகம் அருகே காரில் கடத்திச் சென்ற 224.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் கைது.

கொரோனா காலத்தில் போதிய வேலை மற்றும் வருமானம் இல்லாததால், நண்பர் மூலம் பேசி பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தடாகம் அருகே ரோந்தின் போது காரில் கடத்திச் சென்ற 224.8 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், தடைசெய்யப்பட்ட போதை பொருளை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில இளைஞர்களை கைது செய்தனர். 

கோவை தடாகம் அருகே போலீசார் வாகன சோதனையில் இன்றுஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவில்பாளையத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் (22), மதன் சிங் (22), இந்தர் குமார் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். 



முதல்கட்ட விசாரணையில், லட்சுமணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குரும்பபாளையம் பகுதியில் மளிகை கடையில், மதன் சிங்குடன் வேலை பார்த்து வந்ததாகவும், கொரோனா காலத்தில் போதிய வேலை மற்றும் வருமானம் இல்லாததால், நண்பர் மூலம் பேசி பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதற்காக மூவரும் கோவில்பாளையத்தில் அறை எடுத்து தங்கி, சுமார் 4 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை வாங்கி குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்பலம் ஆகியுள்ளது.



இதையடுத்து, அவர்களிடமிருந்த 224.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த போலிசார் மூவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...