கோவையில் வரதட்சனை கேட்டு கொடுமை - மனைவியின் கையை உடைத்த கணவர் கைது; குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு..!

குனியமுத்தூர் காவல் ஆணையாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு, மனைவியின் கையை உடைத்த அப்புக்குட்டி மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த மயில்கல் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் அப்புகுட்டி(33). ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அன்னூரை சேர்ந்த பிரியங்கா (27) என்பவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, பிரியங்காவிற்கு 7 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில், அப்புக்குட்டி, மற்றும் அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரியங்காவை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கணவன், மாமியார் மற்றும் மாமனார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரியங்காவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பிரியங்காவின் அவரது வலது கை உடைந்துள்ளது. பின்னர், அவரை அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரியங்கா வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, தகவலறிந்து சென்ற குனியமுத்தூர் காவல் ஆணையாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரியங்கா அளித்த புகாரின் பேரில் வரதட்சணை கேட்டு மனைவியின் கையை உடைத்த அப்புக்குட்டி மற்றும் அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், சிறைவைத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர், அப்பெண்ணின் கணவர் அப்புக்குட்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சரஸ்வதி, துரைராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...