குனியமுத்தூர் காவல் ஆணையாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு, மனைவியின் கையை உடைத்த அப்புக்குட்டி மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை குனியமுத்தூர் அடுத்த மயில்கல் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் அப்புகுட்டி(33). ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அன்னூரை சேர்ந்த பிரியங்கா (27) என்பவருக்கும் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது, பிரியங்காவிற்கு 7 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில், அப்புக்குட்டி, மற்றும் அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரியங்காவை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கணவன், மாமியார் மற்றும் மாமனார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரியங்காவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பிரியங்காவின் அவரது வலது கை உடைந்துள்ளது. பின்னர், அவரை அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரியங்கா வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, தகவலறிந்து சென்ற குனியமுத்தூர் காவல் ஆணையாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரியங்கா அளித்த புகாரின் பேரில் வரதட்சணை கேட்டு மனைவியின் கையை உடைத்த அப்புக்குட்டி மற்றும் அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், சிறைவைத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், அப்பெண்ணின் கணவர் அப்புக்குட்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சரஸ்வதி, துரைராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமணத்தின் போது, பிரியங்காவிற்கு 7 பவுன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில், அப்புக்குட்டி, மற்றும் அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரியங்காவை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், கணவன், மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரம் அடைந்த கணவன், மாமியார் மற்றும் மாமனார் ஆகிய 3 பேரும் சேர்ந்து பிரியங்காவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பிரியங்காவின் அவரது வலது கை உடைந்துள்ளது. பின்னர், அவரை அறைக்குள் தள்ளி பூட்டியுள்ளனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த பிரியங்கா வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து சென்று அவரை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து, தகவலறிந்து சென்ற குனியமுத்தூர் காவல் ஆணையாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர் சுகன்யா ஆகியோர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பிரியங்கா அளித்த புகாரின் பேரில் வரதட்சணை கேட்டு மனைவியின் கையை உடைத்த அப்புக்குட்டி மற்றும் அவரது தாய் சரஸ்வதி, தந்தை துரைராஜ் ஆகியோர் மீது ஆபாசமாக பேசுதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், சிறைவைத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர், அப்பெண்ணின் கணவர் அப்புக்குட்டியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சரஸ்வதி, துரைராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.