கோவை விளாங்குறிச்சியில் புதிய 'டாஸ்மாக்' வேண்டாம்.. ஆட்சியரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு..!

'விளாங்குறிச்சி கிராமம்' என்ற பெயரை மாற்றி 'டாஸ்மாக் கிராமம்' என கூறும் அளவிற்கு அங்கு மதுபான கடைகள் இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.



கோவை: கோவை விளாங்குறிச்சி பகுதியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாங்குறிச்சி சாலை சேரன் மாநகர் பகுதியில் 10 டாஸ்மாக் கடைகள் இருக்கின்ற நிலையில், மேலும் ஒரு டாஸ்மாக் கடை (கடை எண்:1567) அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதனை அகற்ற வலியுறுத்தியும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்திலும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



அந்த பகுதியில் மக்கள் அதிகம் வசித்து வருவதாலும், கடை அமைய உள்ள இடத்தின் அருகிலேயே பேருந்து நிறுத்தம் இருப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் எனவே டாஸ்மாக் கடையை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் விளாங்குறிச்சி கிராமம் என்ற பெயரை மாற்றி டாஸ்மாக் கிராமம் என கூறும் அளவிற்கு அங்கு மதுபான கடைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.



இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார், அப்பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதி பொதுமக்கள் அதனை எதிர்ப்பதாகவும், இதுகுறித்து ஏற்கனவே கடை உரிமையாளரிடம் தெரிவித்தும் தொடர்ந்து கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், எனவே இந்த கடையை அகற்றுவது குறித்து மாவட்ட காவல் ஆணையரிடமும் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ஏற்கனவே அந்த கிராமத்தில் 10 பார்கள் இருப்பதாக தெரிவித்த அவர் 3 மாநகராட்சி கவுன்சிலர்கள் இல்லமும் அங்குதான் இருப்பதாக தெரிவித்தார். மேலும் பார் உரிமையாளர்கள் தரைகுறைவாக பேசுவதாகவும் தெரிவித்தார்.

திமுக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வரவில்லை என்றாலும் நேர கட்டுப்பாட்டை கடைபிடித்தால் கூட போதுமானது என தெரிவித்தார். விளாங்குறிச்சி பகுதியில் புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...