மாம்பழங்களை ருசித்து சென்றதோடு மாந்தோப்பில் இருந்த 20க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியது. இதனால், 3-லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்தார்.
கோவை: பொள்ளாச்சி அருகே மாந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானை, 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நரிமுடக்கு எனும் இடத்தில் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மாந்தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
தற்போது மாம்பழங்களின் சீசன் என்பதால் மரங்களில் கனிந்து நின்ற மாம்பழங்களைப் பறித்து விற்பனை செய்ய சக்திவேல் திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில், மாந்தோப்புக்குள் காட்டு யானை நுழைந்து பறிப்பதற்கு தயாரான நிலையில் இருந்த மாம்பழங்களை ருசித்துச் சென்றதோடு மாந்தோப்பில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியது.

இதனால், 3 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த மரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
தோட்டத்துக்குள் காட்டு யானை வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நரிமுடக்கு எனும் இடத்தில் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மாந்தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
தற்போது மாம்பழங்களின் சீசன் என்பதால் மரங்களில் கனிந்து நின்ற மாம்பழங்களைப் பறித்து விற்பனை செய்ய சக்திவேல் திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில், மாந்தோப்புக்குள் காட்டு யானை நுழைந்து பறிப்பதற்கு தயாரான நிலையில் இருந்த மாம்பழங்களை ருசித்துச் சென்றதோடு மாந்தோப்பில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியது.
இதனால், 3 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த மரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
தோட்டத்துக்குள் காட்டு யானை வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.