கோவை பொள்ளாச்சி அருகே மாந்தோப்பை சூறையாடிய காட்டு யானை..!

மாம்பழங்களை ருசித்து சென்றதோடு மாந்தோப்பில் இருந்த 20க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியது. இதனால், 3-லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயி வேதனை தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி அருகே மாந்தோப்புக்குள் புகுந்த காட்டு யானை, 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியதால் விவசாயி கவலை அடைந்துள்ளனர்.

பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள நரிமுடக்கு எனும் இடத்தில் தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் மாந்தோப்பு அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.

தற்போது மாம்பழங்களின் சீசன் என்பதால் மரங்களில் கனிந்து நின்ற மாம்பழங்களைப் பறித்து விற்பனை செய்ய சக்திவேல் திட்டமிட்டு இருந்தார்.



இந்நிலையில், மாந்தோப்புக்குள் காட்டு யானை நுழைந்து பறிப்பதற்கு தயாரான நிலையில் இருந்த மாம்பழங்களை ருசித்துச் சென்றதோடு மாந்தோப்பில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மா மரங்களை சேதப்படுத்தியது.



இதனால், 3 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சேதமடைந்த மரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

தோட்டத்துக்குள் காட்டு யானை வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...