கோவை கிணத்துக்கடவில் வீட்டு வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் சிறுமி மாயம்..!

வீட்டில் இருந்தபோது செல்போன் பயன்படுத்தியதால், வீட்டு வேலை செய்யுமாறு தாய் கண்டித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய 17-வயது சிறுமியை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் 17 வயது சிறுமி மாயமான நிலையில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கிணத்துக்கடவு அருகே உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.

இந்த நிலையில் சிறுமி வீட்டில் இருந்தபோது செல்போன் பயன்படுத்தி விட்டு வீட்டில் வேலை ஏதும் செய்வது இல்லை என கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தாய் கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தியில் இருந்த சிறுமி கடந்த 24-ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக காலையில் சென்றவர் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்காததால் அந்த சிறுமியின் பெற்றோர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 17 வயது சிறுமியை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...