வீட்டில் இருந்தபோது செல்போன் பயன்படுத்தியதால், வீட்டு வேலை செய்யுமாறு தாய் கண்டித்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறிய 17-வயது சிறுமியை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை: செல்போன் பயன்படுத்தியதை கண்டித்ததால் 17 வயது சிறுமி மாயமான நிலையில், கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கிணத்துக்கடவு அருகே உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.
இந்த நிலையில் சிறுமி வீட்டில் இருந்தபோது செல்போன் பயன்படுத்தி விட்டு வீட்டில் வேலை ஏதும் செய்வது இல்லை என கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தாய் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தியில் இருந்த சிறுமி கடந்த 24-ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக காலையில் சென்றவர் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்காததால் அந்த சிறுமியின் பெற்றோர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 17 வயது சிறுமியை தேடி வருகின்றனர்.
கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கிணத்துக்கடவு அருகே உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.
இந்த நிலையில் சிறுமி வீட்டில் இருந்தபோது செல்போன் பயன்படுத்தி விட்டு வீட்டில் வேலை ஏதும் செய்வது இல்லை என கூறப்படுகிறது. இதனால் சிறுமியின் தாய் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் விரக்தியில் இருந்த சிறுமி கடந்த 24-ஆம் தேதி பள்ளிக்கு செல்வதாக காலையில் சென்றவர் வீடு திரும்பாததால் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி கிடைக்காததால் அந்த சிறுமியின் பெற்றோர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 17 வயது சிறுமியை தேடி வருகின்றனர்.