இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அடிப்படை வசதி, புதிய குடும்ப அட்டை, கழிப்பிட வசதி, பட்டா நகல் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை: கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் ஜமாபந்தி இன்று முதல் மே 31-தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று வடசித்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 9-கிராமங்களுக்கு நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலர், கலால் துறை இணை ஆணையாளர் சுபாநந்தினி கலந்து கொண்டு கிராம மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அடிப்படை வசதி, புதிய குடும்ப அட்டை, கழிப்பிட வசதி, பட்டா நகல் கேட்டும் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இந்த ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஜமாபந்தியில் அனைத்துத்துறை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் ஜமாபந்தி இன்று முதல் மே 31-தேதி வரை நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று வடசித்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 9-கிராமங்களுக்கு நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலர், கலால் துறை இணை ஆணையாளர் சுபாநந்தினி கலந்து கொண்டு கிராம மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அடிப்படை வசதி, புதிய குடும்ப அட்டை, கழிப்பிட வசதி, பட்டா நகல் கேட்டும் பொதுமக்கள் மனு அளித்தனர்.
இந்த ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஜமாபந்தியில் அனைத்துத்துறை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.