'மக்களின் குறை தீர்க்கும் ஜமாபந்தி'- கோவையில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு..!

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அடிப்படை வசதி, புதிய குடும்ப அட்டை, கழிப்பிட வசதி, பட்டா நகல் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் ஜமாபந்தி இன்று முதல் மே 31-தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று வடசித்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 9-கிராமங்களுக்கு நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலர், கலால் துறை இணை ஆணையாளர் சுபாநந்தினி கலந்து கொண்டு கிராம மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அடிப்படை வசதி, புதிய குடும்ப அட்டை, கழிப்பிட வசதி, பட்டா நகல் கேட்டும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்த ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஜமாபந்தியில் அனைத்துத்துறை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...