கோவை அதிமுக எம்.எல்.ஏ மீது காவல் ஆணையரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார்…!

டாஸ்மாக் பார் ஊழியர்களை ஆபாசமான வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்த கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



கோவை: சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கடந்த 23-ஆம் தேதி கோவை சேரன்மாநகர், விளாங்குறிச்சி பிரதான சாலையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் தலைமையில் அதிமுக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு வந்த சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் அங்கு நின்று கொண்டிருந்த வியாபாரிகள் மற்றும் பார்ஊழியர்களைப் பார்த்து தென் மாவட்டத்திலிருந்து வந்தவங்க என கூறி ஆபாச வார்த்தையைக் கூறி திட்டி உள்ளார்.

இந்நிலையில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதோடு மிரட்டல் விடுத்த அதிமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:-



தமிழ்நாட்டில் ஜாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து வாழும் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட பிரிவினைவாதிகளை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

பொதுவாழ்வில் உள்ளவரின் இத்தகைய செயல் மாவட்ட ரீதியாக பிரிவினைவாதத்தை உண்டு படுத்தும் வகையில் உள்ளது.

இத்தகைய மாவட்ட ரீதியாக வேற்றுமை பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...