கோவை அதிமுக எம்.எல்.ஏ மீது காவல் ஆணையரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார்…!

டாஸ்மாக் பார் ஊழியர்களை ஆபாசமான வார்த்தையில் பேசி மிரட்டல் விடுத்த கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.



கோவை: சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

கடந்த 23-ஆம் தேதி கோவை சேரன்மாநகர், விளாங்குறிச்சி பிரதான சாலையில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் தலைமையில் அதிமுக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அங்கு வந்த சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் அங்கு நின்று கொண்டிருந்த வியாபாரிகள் மற்றும் பார்ஊழியர்களைப் பார்த்து தென் மாவட்டத்திலிருந்து வந்தவங்க என கூறி ஆபாச வார்த்தையைக் கூறி திட்டி உள்ளார்.

இந்நிலையில், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதோடு மிரட்டல் விடுத்த அதிமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையாளரிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்கத்தினர் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் கூறும்போது:-



தமிழ்நாட்டில் ஜாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து வாழும் மக்களுக்கு வேதனையை ஏற்படுத்துகிறது. பெரிய பொறுப்பில் இருந்து கொண்டு இப்படிப்பட்ட பிரிவினைவாதிகளை பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

பொதுவாழ்வில் உள்ளவரின் இத்தகைய செயல் மாவட்ட ரீதியாக பிரிவினைவாதத்தை உண்டு படுத்தும் வகையில் உள்ளது.

இத்தகைய மாவட்ட ரீதியாக வேற்றுமை பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...