பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 420-கிலோ ரேஷன் அரிசி கோவையில் பறிமுதல்..!

35-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் மொத்தம் 420-கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 450-கிலோ ரேஷன் அரிசியைபோலீசார் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதைத் தடுக்க குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்மாக்கினாம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் நேற்று, மாக்கினாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், 35-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் மொத்தம் 420-கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

பின்னர் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற கார் டிரைவர் ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...