35-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் மொத்தம் 420-கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 450-கிலோ ரேஷன் அரிசியைபோலீசார் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதைத் தடுக்க குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்மாக்கினாம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் நேற்று, மாக்கினாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், 35-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் மொத்தம் 420-கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
பின்னர் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற கார் டிரைவர் ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் இதைத் தடுக்க குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்மாக்கினாம்பட்டியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் போலீசார் நேற்று, மாக்கினாம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில், 35-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் மொத்தம் 420-கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
பின்னர் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்ற கார் டிரைவர் ரஞ்சித் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.