திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது

திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கையில், காரின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். விபத்து குறித்து, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



திருப்பூர்: திருப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியை சேர்ந்தவர் லூர்து ராஜ் (வயது 41). கட்டட வடிவமைப்பாளரான இவர், தனது தொழில் விஷயமாக நேற்று காலை ஹோண்டா i20 காரில் தனது டிரைவர் செபஸ்டியன் (48) என்பவர் அழைத்துக் கொண்டு கோவைக்கு சென்றுள்ளார்.

திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள நண்பர் விஜயராஜ் அழைத்துச் செல்ல இரவு அவரது வீட்டிற்கு வந்துள்ளார். பின்பு, மூன்று பேரும் காரைக்குடி செல்வதற்காக வீரபாண்டி பகுதியிலிருந்து கோயில் வழி செல்லும் சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், திருப்பூர் பூங்கா நகர் பகுதி அருகே வந்தபோது திடீரென்று கார் முன் பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. உடனடியாக, டிரைவர் காரை சாலையோரம் நிறுத்தினார். பின்பு மூவரும் காரை விட்டு வெளியேறி, அருகில் இருந்து தண்ணீரை வாங்கி புகையை அணைக்க முயற்சி செய்தனர்.



ஆனால், சற்றும் எதிர்பாராத நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.



உடனடியாக, திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வடக்கு தீயணைப்புத் துறையினர், சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.



இதுகுறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கையில், காரின் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட கோளாறினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர். விபத்து குறித்து, நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலையில் சென்று கொண்டிருந்த கார், திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...