திருப்பூரில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறியதால் பொதுமக்கள் சாலை மறியல்..!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பல்லடம், திருப்பூர் பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே நீர்நிலை பகுதியில் உள்ள பொதுமக்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறியதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செங்குட்டை பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ரேசன் கடை, குடிநீர் தொட்டி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பல்லடம் நகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்ட நிலையில் அப்பகுதி நீர் வழிப்பாதையில் அமைந்துள்ளதாக கூறி பொதுமக்கள் குடியிருப்பினை அகற்ற வேண்டும் என வருவாய்த்துறை சார்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

குடியிருப்புகளை அகற்ற வேண்டும் என வருவாய் துறையினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாரை சந்தித்து குடியிருப்புகளை காலி செய்ய கால அவகாசம் கேட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அப்பகுதிக்கு சென்ற வருவாய் துறையினர் நாளை குடியிருப்புகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறினர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் பல்லடம், திருப்பூர் பிரதான சாலையில் ராயர் பாளையத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் காவல் துறையினர், பல்லடம் தாசில்தார் நந்தகோபால் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இடத்தை காலி செய்வதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...