ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளையும், அதனை அரைக்கப் பயன்படுத்திய இயந்திரத்தையும், பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் பொருட்களை பதுக்கி அரைத்து மாவாக்கி விற்ற நூதன திருடர்களையும் கைது செய்தனர்.
கோவை: பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை அரைத்து மாவாக்கி விற்ற நூதன திருடர்கள் இருவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி மாவாக மாற்றி விற்பனை நடப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் நேற்று, கோவை ரோடு மணியன் தோட்டம் முதல் தெருவில் உள்ள ஒரு அரவை மில்லில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு, ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், ஆய்வின்போது 45-கிலோ எடையில் 25-மூட்டைகளில் 1710-கிலோ ரேஷன் அரிசியும், 45-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் 540-கிலோ ரேசன் கோதுமையும் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளையும், அதனை அரைக்கப் பயன்படுத்திய இயந்திரத்தையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களைப் பதுக்கிய30-வயதான முகமது மற்றும் 36-வயதான இம்தியாஸ் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களுக்கு, உடந்தையாக இருந்த மில் உரிமையாளர் இம்ரானை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி மாவாக மாற்றி விற்பனை நடப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் நேற்று, கோவை ரோடு மணியன் தோட்டம் முதல் தெருவில் உள்ள ஒரு அரவை மில்லில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு, ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், ஆய்வின்போது 45-கிலோ எடையில் 25-மூட்டைகளில் 1710-கிலோ ரேஷன் அரிசியும், 45-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் 540-கிலோ ரேசன் கோதுமையும் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளையும், அதனை அரைக்கப் பயன்படுத்திய இயந்திரத்தையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களைப் பதுக்கிய30-வயதான முகமது மற்றும் 36-வயதான இம்தியாஸ் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களுக்கு, உடந்தையாக இருந்த மில் உரிமையாளர் இம்ரானை தேடி வருகின்றனர்.