கோவையில் அரிசியாக இல்லை மாவாக கடத்தப்படும் ரேஷன் அரிசி: பொள்ளாச்சியில் இருவர் கைது; ஒருவருக்கு வலை..!

ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளையும், அதனை அரைக்கப் பயன்படுத்திய இயந்திரத்தையும், பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் பொருட்களை பதுக்கி அரைத்து மாவாக்கி விற்ற நூதன திருடர்களையும் கைது செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை அரைத்து மாவாக்கி விற்ற நூதன திருடர்கள் இருவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பொள்ளாச்சியில், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி மாவாக மாற்றி விற்பனை நடப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஆய்வாளர் கோபிநாத் மற்றும் போலீசார் நேற்று, கோவை ரோடு மணியன் தோட்டம் முதல் தெருவில் உள்ள ஒரு அரவை மில்லில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு, ரேஷன் அரிசியை மாவாக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், ஆய்வின்போது 45-கிலோ எடையில் 25-மூட்டைகளில் 1710-கிலோ ரேஷன் அரிசியும், 45-கிலோ எடை கொண்ட 12-மூட்டைகளில் 540-கிலோ ரேசன் கோதுமையும் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்தது.

பின்னர், ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டைகளையும், அதனை அரைக்கப் பயன்படுத்திய இயந்திரத்தையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சட்டவிரோதமாக ரேஷன் பொருட்களைப் பதுக்கிய30-வயதான முகமது மற்றும் 36-வயதான இம்தியாஸ் ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களுக்கு, உடந்தையாக இருந்த மில் உரிமையாளர் இம்ரானை தேடி வருகின்றனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...