கோவை பொள்ளாச்சி அருகே கடன் தர மறுத்த பெயிண்டரை சரமாரியாக தாக்கிய 2-பேர் கைது..!

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே கடன் தர மறுத்த பெயிண்டரை சரமாரியாக தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே கிட்டசூராம்பாளையத்தை சேர்ந்தவர் 41-வயதான ராதாகிருஷ்ணன். பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம், டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த 24-வயதான லோகேஷ் மற்றும் 24-வயதான பிரதீப் ஆகியோர், ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று கடன் கேட்டுள்ளனர்.

அப்போது தன்னிடம் தற்போது பணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து ராதாகிருஷ்ணனிடம் இருவரும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும், ராதாகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில், காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோகேஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...