கோவை பொள்ளாச்சி அருகே கடன் தர மறுத்த பெயிண்டரை சரமாரியாக தாக்கிய 2-பேர் கைது..!

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி அருகே கடன் தர மறுத்த பெயிண்டரை சரமாரியாக தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே கிட்டசூராம்பாளையத்தை சேர்ந்தவர் 41-வயதான ராதாகிருஷ்ணன். பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம், டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த 24-வயதான லோகேஷ் மற்றும் 24-வயதான பிரதீப் ஆகியோர், ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று கடன் கேட்டுள்ளனர்.

அப்போது தன்னிடம் தற்போது பணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து ராதாகிருஷ்ணனிடம் இருவரும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும், ராதாகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில், காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோகேஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...