சேரன்மாநகர் பகுதிகளில் ஒரே நாளில் மட்டும் 25 தெரு விளக்குகள் பழுது நீக்கம்!

கோவை மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 25 தெரு விளக்குகள் பழுது சரிசெய்யப்பட்டன.


கோவை: சேரன்மாநகர் மற்றும் அதன் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் தெரு விளக்குகள் பராமரிப்பு மற்றும் பழுது சரி செய்தல் குழுவினர் நேற்று (21.05.2022) வரவழைக்கப்பட்டனர்.

பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின் விளக்குகள் குறித்த புகார்களை மொபைல் போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் செய்தியாகவோ அனுப்பலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன்படி வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீட்டின் அருகே அமைந்துள்ள தெருவிளக்கு பழுது குறித்து புகார் தெரிவித்தனர். தவிர சேரன்மாநகர் ஏழாவது பஸ் ஸ்டாப் அருகே அமைந்துள்ள சிறுவர் பூங்கா வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள டவர் விளக்கு பழுது ஏற்பட்டது குறித்து பராமரிப்பு குழுவினரிடம் தெரிவிக்கப்பட்டது.



இதையடுத்து அந்தப் பகுதிகளில் பழுது நீக்கும் பணி நடைபெற்றது.

இது குறித்து கோவை மாநகராட்சி 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கூறுகையில், "கடந்த சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்ற பராமரிப்பு பணியின் போது 25 தெரு விளக்குகள் பழுது சரி செய்யப்பட்டது. வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளியில் இதுபோன்ற பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" என்றார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...