பொள்ளாச்சியில் கள்ளச்சாவி போட்டு தலைமை ஆசிரியை காரைத் திருடிய டிரைவர் உள்ளிட்ட இருவர் கைது!

பொள்ளாச்சியில் கள்ளச்சாவி போட்டு தலைமை ஆசிரியை காரை திருடிய டிரைவர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே வஞ்சியபுரம் பிரிவு அம்மன் நகரைச் சேர்ந்தவர் 48 வயதான உமாதேவி.

இவர், கோவையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி சென்னை செல்வதற்காக தனது காரில் மகள் சோபியா உடன் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். கார் ஆக்டிங் டிரைவர் ராகவசந்த் என்பவர் ஓட்டி சென்றார்.

உமாதேவியை ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு பின்னர், அவரது மகள் சோபியாவை வீட்டுக்கு காரில் அழைத்துச் சென்ற ராகவசந்த் காரை நிறுத்தி விட்டு சாவியை சோபியாவிடம் கொடுத்துச் சென்றுள்ளார். 20ம் தேதி காலை வீட்டுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சோபியா, அவரது தாய் உமாதேவிக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து, 21ம் தேதி உமாதேவி இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த கிழக்கு போலீசார் நேற்று சூளேஸ்வரன்பட்டி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, ராகவசந்த் பிடிபட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பாலமநல்லூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவரிடம் கடன் பெற்றதாகவும், அந்த கடனை திருப்பிச் செலுத்துவதற்காக உமாதேவியின் காரை திருடி விற்பனை செய்ய திட்டமிட்டு, காருக்கு கள்ளச்சாவி போட்டு திருடியதும், பிறகு காரை பாலமுருகனிடம் கொடுத்து, விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, ராகவசந்த் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் கிழக்கு போலீசார் கைது செய்தனர். மேலும், திருடு போன வாகனத்தையும் மீட்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...