பொள்ளாச்சியில் குதிரை வளர்ப்பு விழிப்புணர்வு: திமுக இளைஞரணி சார்பில் நடந்த குதிரை பந்தயம்!

குதிரை வளர்ப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி அருகே திமுக இளைஞரணி சார்பில் குதிரை பந்தயம் நடைபெற்றது.


கோவை: திமுக ஆட்சியின் ஒரு ஆண்டுகால சாதனையை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையிலும், குதிரை வளர்ப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் - ரங்கம்புதூர் மேடு பகுதியில் குதிரை பந்தயம் நடைபெற்றது.



கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கலந்துகொண்டு கொடியசைத்து குதிரை பந்தயத்தை தொடங்கி வைத்தார்.

இதில் கோவை, திருப்பூர், ஈரோடு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. சிறிய குதிரை, பெரிய குதிரை, நடு குதிரை மற்றும் ஏறு சவாரி, வண்டி சவாரி என ஐந்து பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதற்கு 400 மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.



இந்த தூரத்தை கடக்க ஏறு சவாரியில் உரிமையாளர்கள் குதிரை மீது ஏறியதும் வெற்றி இலக்கை நோக்கி குதிரைகள் சீறிப் பாய்ந்தது. அதேபோல் பூட்டிய வண்டியில் குதிரைகள் சீறிப் பாய்ந்ததை ஏராளமான பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். இறுதியாக வெற்றி பெற்ற குதிரை உரிமையாளர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...