குதிரை வளர்ப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொள்ளாச்சி அருகே திமுக இளைஞரணி சார்பில் குதிரை பந்தயம் நடைபெற்றது.
கோவை: திமுக ஆட்சியின் ஒரு ஆண்டுகால சாதனையை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையிலும், குதிரை வளர்ப்பு குறித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் - ரங்கம்புதூர் மேடு பகுதியில் குதிரை பந்தயம் நடைபெற்றது.

கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கலந்துகொண்டு கொடியசைத்து குதிரை பந்தயத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. சிறிய குதிரை, பெரிய குதிரை, நடு குதிரை மற்றும் ஏறு சவாரி, வண்டி சவாரி என ஐந்து பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதற்கு 400 மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த தூரத்தை கடக்க ஏறு சவாரியில் உரிமையாளர்கள் குதிரை மீது ஏறியதும் வெற்றி இலக்கை நோக்கி குதிரைகள் சீறிப் பாய்ந்தது. அதேபோல் பூட்டிய வண்டியில் குதிரைகள் சீறிப் பாய்ந்ததை ஏராளமான பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். இறுதியாக வெற்றி பெற்ற குதிரை உரிமையாளர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் கலந்துகொண்டு கொடியசைத்து குதிரை பந்தயத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கோவை, திருப்பூர், ஈரோடு திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்து கொண்டன. சிறிய குதிரை, பெரிய குதிரை, நடு குதிரை மற்றும் ஏறு சவாரி, வண்டி சவாரி என ஐந்து பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. இதற்கு 400 மீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த தூரத்தை கடக்க ஏறு சவாரியில் உரிமையாளர்கள் குதிரை மீது ஏறியதும் வெற்றி இலக்கை நோக்கி குதிரைகள் சீறிப் பாய்ந்தது. அதேபோல் பூட்டிய வண்டியில் குதிரைகள் சீறிப் பாய்ந்ததை ஏராளமான பொதுமக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். இறுதியாக வெற்றி பெற்ற குதிரை உரிமையாளர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது.