பொள்ளாச்சியில் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வரைந்த ஓவிய கண்காட்சி: பார்வையாளர்களை கவர்ந்த ஸ்ரீதேவி, சேகுவேரா ஓவியங்கள்!

பொள்ளாச்சியில் தனது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஓவியங்கள் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதியை திருநங்கைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்று திருநங்கை கல்கி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வரைந்த ஓவிய விற்பனை கண்காட்சி பொள்ளாச்சி நல்லப்பா வீதியில் உள்ள ஒரு கடையில் நடைபெற்றது.



பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில், புரட்சியாளர் சேகுவேரா, பழங்குடியின பெண், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஓவியங்களை அங்கு வந்த பார்வையாளர்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.

நவீன முறையில் தீட்டப்பட்ட ஓவியங்களின் மூலம் விற்பனையாகும் தொகையின் ஒரு பங்கு திருநங்கைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும், தமிழக அரசு தற்போது திருநங்கைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்தாலும், கலை மற்றும் கல்வி திறமைகளை ஊக்குவிக்க சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சிக் கூடங்கள் அமைத்து தர வேண்டும் என்றும், திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் இரண்டு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...