பொள்ளாச்சியில் திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வரைந்த ஓவிய கண்காட்சி: பார்வையாளர்களை கவர்ந்த ஸ்ரீதேவி, சேகுவேரா ஓவியங்கள்!

பொள்ளாச்சியில் தனது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஓவியங்கள் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதியை திருநங்கைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்று திருநங்கை கல்கி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் வரைந்த ஓவிய விற்பனை கண்காட்சி பொள்ளாச்சி நல்லப்பா வீதியில் உள்ள ஒரு கடையில் நடைபெற்றது.



பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.

இந்த கண்காட்சியில், புரட்சியாளர் சேகுவேரா, பழங்குடியின பெண், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்ட பல்வேறு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஓவியங்களை அங்கு வந்த பார்வையாளர்கள் பலரும் பார்த்து ரசித்தனர்.

நவீன முறையில் தீட்டப்பட்ட ஓவியங்களின் மூலம் விற்பனையாகும் தொகையின் ஒரு பங்கு திருநங்கைகளின் கல்விக்காக செலவிடப்படும் என்றும், தமிழக அரசு தற்போது திருநங்கைகளுக்கு பல்வேறு உதவிகள் செய்தாலும், கலை மற்றும் கல்வி திறமைகளை ஊக்குவிக்க சிறப்பு கவனம் செலுத்தி பயிற்சிக் கூடங்கள் அமைத்து தர வேண்டும் என்றும், திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் இரண்டு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், திருநங்கை கல்கி சுப்பிரமணியம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...