கோவை பெரியார் படிப்பகத்தில் மாட்டுக்கறியுடன் தடல் புடல் விருந்து..!

ஆம்பூரில் பிரியாணி திருவிழா மறுக்கப்பட்டது குறித்தும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் விதமாகவும், கோவை பெரியார் படிப்பகத்தில் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் பெரியார் படிப்பகத்தில் மாட்டுக்கறி விருந்து நடைபெற்றது.

சில தினங்களுக்கு ஆம்பூரில் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாக மாறிய நிலையில், இதனை கண்டித்து பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்க அனுமதி அளிக்க வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆம்பூரில் நடைபெறவிருந்த பிரியாணி திருவிழாவை அம்மாவட்ட ஆட்சியர் ரத்து செய்து உத்தரவிட்டார்.



இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன் விடுதலையை கொண்டாடும் விதமாகவும், கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் உட்பட பெரியாரிய அமைப்புகள் சார்பில் மாட்டுக்கறி பிரியாணி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.



தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பெரியாரிய அமைப்புகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.



இந்த மாட்டுக்கறி பிரியாணி விருந்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



அவர்களுக்கு மாட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி கிரேவி மற்றும் கைமா வடை ஆகியவை வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...