கோவையில் அரசு பேருந்து மோதி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சேர்ந்தவர் கருப்பசாமி (54). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கருப்பசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கருப்பசாமியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.