கோவை சிறுமுகையில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

கோவையில் சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தூத்துக்குடி மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். அவரது மகன் தாமோதரன் (41) தலைமைக் காவலர்.



இவர் தற்போது மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி பிரேமிதா (13) என்ற மகளும், கார்த்திக் (8) என்ற மகனும் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு சென்ற தாமோதரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவரது வீடு வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது தாமோதரன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுமுகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைமைக் காவலர் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...