இந்த பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோவை: கோவை மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் மாநகராட்சியில் உள்ள 5-மண்டலங்களிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சாலை பணிகள் நடைபெற்று வரும்ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவ்வப்போது திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 92, 93 வார்டுக்குட்பட்ட மணிகண்டன் நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில், 6.27 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 45 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

முறையாகச் சாலை பணிகள் நடைபெற்று வருகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் இளஞ்சேகரன், பாபு,அப்துல்காதர்,உதவி செயற்பொறியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சாலை பணிகள் நடைபெற்று வரும்ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவ்வப்போது திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 92, 93 வார்டுக்குட்பட்ட மணிகண்டன் நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில், 6.27 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 45 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
முறையாகச் சாலை பணிகள் நடைபெற்று வருகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் இளஞ்சேகரன், பாபு,அப்துல்காதர்,உதவி செயற்பொறியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.