கோவை மாநகராட்சி மணிகண்டன் நகர் பகுதியில் ரூ.3.24-கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம்…!

இந்த பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் மாநகராட்சியில் உள்ள 5-மண்டலங்களிலும் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாலை பணிகள் நடைபெற்று வரும்ஒவ்வொரு பகுதியிலும் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவ்வப்போது திடீரென ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 92, 93 வார்டுக்குட்பட்ட மணிகண்டன் நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில், 6.27 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுமார் 45 இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.



முறையாகச் சாலை பணிகள் நடைபெற்று வருகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தனர். அப்போது ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள் இளஞ்சேகரன், பாபு,அப்துல்காதர்,உதவி செயற்பொறியாளர்கள், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...