ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கி பிடிப்போம்- "திராவிட மாடல் தான் தேசிய மாடல்" கோவை பயிலரங்கில் எம்பி. ஆ.ராசா பேச்சு..!

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் உயர்த்தியது திராவிடம் எனவே, ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கி பிடிப்போம் என தெரிவித்தார்.


கோவை:காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் "திராவிட மாடல் தான் தேசிய மாடல்" என்ற தலைப்பில்பயிலரங்கம் நடைபெற்றது.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் அ.ராசா, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



அதனை தொடர்ந்து பேசிய, திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசுகையில், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது எனவும் இதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் தான் என தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும் போது ஆட்சி பணியில் சிறப்பாக இருப்பார் என்பதை நான் அறிவேன் என்றும், திராவிடத்தை காப்பாற்ற கடவுள் நம்பிக்கை உள்ள செந்தில் பாலாஜி இந்த கருத்தரங்கை நடத்துவதை பாராட்டுகிறேன் என தெரிவித்தார்.

பூனாவில் கருத்தரங்கிற்கு நான் சென்றபோது பைலட் செல்ஃபி எடுக்கமுற்பட்டார் அப்போது அவரிடம் விசாரித்த போது, அதற்கு பைலட் 2-ஜி என என்னை தெரிவித்தார் என கூறிய அவர் அது என்னை எங்கே வரை கொண்டு விட்டுள்ளது பார்த்தீர்களா என நகைச்சுவைத்தார்.

வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துவது தான் ஆரிய மாடல் எனவும், வருணாசிரமத்தை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவந்து திணித்தார்கள் எனவும் கூறினார்.

கல்வியை மறுத்த மதம் சனாதன மதம்இந்து என்ற பெயரைக் கொடுத்தது ஆங்கிலேயர்கள் எனவும் தெரிவித்தார். பெண்களை வீட்டில் இருக்க சொன்னவர்கள் ஆரியர்கள் சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயன்றவர்கள் ஆரியர்கள்அதை நேருவும் அம்பேத்கரும் உடைத்தனர் என கூறினார்.

பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடம் எனவும், ஆரிய மாடலையும் திராவிட மாடலையும் கவனித்து பாருங்கள் பெரியாரின் நோக்கம் கடவுள் எதிர்ப்பு மட்டுமல்ல பெண்ணியம், சாதி ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் பங்கு என தெரிவித்தார்.

சனாதனத்தை எதிர்த்தவர்கள் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டனர் எனவும், அதுவே சேரிகளாக மாறியது எனவும் தெரிவித்தார். 1996-ஆம் ஆண்டில் கலைஞர் சமத்துவபுரத்தை உருவாக்கினார் என கூறியவர் செவிடன் குருடன் நொண்டி என அழைக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளி என அழைக்கப்பட்டனர்.

இது கலைஞர் ஆட்சியில் நடைபெற்றது, அதே சமயத்தில் தான் அலி அரவாணி என அழைக்கப்பட்டவர்கள் இன்று திருநங்கைகள் என்று அழைக்கப்படுகின்றனர். இது திராவிட ஆட்சியில் நடந்தது என தெரிவித்தார். இருளர் சமுதாயத்தை தேடிச்சென்று உதவியவர் முதல்வர் ஸ்டாலின் எனவும் இதுதான் திராவிட மாடல் எனவும் தெரிவித்தார்.

காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல எனவும் அதுவும் திராவிடம் தான் என தெரிவித்தார். எதைக் கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள்படிப்பார்கள் என பள்ளியில் உணவை கொடுத்தது திராவிட மாடல் என கூறினார்.

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் உயர்த்தியது திராவிடம் எனவே, ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கி பிடிப்போம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...