கோவை செல்வபுரம் அருகே பாட்டியை கொல்ல முயன்ற பேரன் கைது

கோவையில் பணம் கேட்ட பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் பணம் கேட்ட பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26). இவர், சரியாக வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், வீட்டு செலவிற்கு பணம் கேட்டு, கார்த்தி அவரது பாட்டி மீனாவிற்கு தொல்லை கொடுத்ததால், வட்டிக்கு பணம் வாங்கி அவர் பாட்டி கொடுத்துள்ளார்.

தொடர்ந்து, கார்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி திறிந்தது மட்டுமல்லாமல், பாட்டி வாங்கி கொடுத்த கடனுக்கும் பணம் கொடுக்காமல் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் உணவருந்த வந்த கார்த்தியிடம், அவர் பாட்டி வட்டிக்கு வாங்கிக் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.

இதில், பாட்டிக்கும், பேரனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில், வலி தாங்க முடியாமல் அலறிய பாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கழுத்தில் காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கார்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு அவரை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...