கோவையில் பணம் கேட்ட பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவையில் பணம் கேட்ட பாட்டியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற பேரனை போலீசார் கைது செய்தனர்.
கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26). இவர், சரியாக வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், வீட்டு செலவிற்கு பணம் கேட்டு, கார்த்தி அவரது பாட்டி மீனாவிற்கு தொல்லை கொடுத்ததால், வட்டிக்கு பணம் வாங்கி அவர் பாட்டி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, கார்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி திறிந்தது மட்டுமல்லாமல், பாட்டி வாங்கி கொடுத்த கடனுக்கும் பணம் கொடுக்காமல் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் உணவருந்த வந்த கார்த்தியிடம், அவர் பாட்டி வட்டிக்கு வாங்கிக் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.
இதில், பாட்டிக்கும், பேரனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில், வலி தாங்க முடியாமல் அலறிய பாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கழுத்தில் காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கார்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு அவரை சிறையில் அடைத்தனர்.
கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (26). இவர், சரியாக வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், வீட்டு செலவிற்கு பணம் கேட்டு, கார்த்தி அவரது பாட்டி மீனாவிற்கு தொல்லை கொடுத்ததால், வட்டிக்கு பணம் வாங்கி அவர் பாட்டி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, கார்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் சுற்றி திறிந்தது மட்டுமல்லாமல், பாட்டி வாங்கி கொடுத்த கடனுக்கும் பணம் கொடுக்காமல் வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று மதியம் உணவருந்த வந்த கார்த்தியிடம், அவர் பாட்டி வட்டிக்கு வாங்கிக் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.
இதில், பாட்டிக்கும், பேரனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கார்த்தி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். இதில், வலி தாங்க முடியாமல் அலறிய பாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கழுத்தில் காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலீசார் பாட்டியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற கார்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு அவரை சிறையில் அடைத்தனர்.