கோவையில் ஒன்பது லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் வழங்கும் திட்டம் தயார்!

கோவையில் 9 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டத்தின் முக்கிய அம்சமாக, இயற்கை எரிவாயுவை இருப்பு வைக்கும் 'சிட்டி கேட் ஸ்டேஷன்' கட்டுமானப் பணி முடிவு பெற்று திறக்கப்பட்டுள்ளது.


கோவை:கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 12 ஆயிரத்து 783 வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம், இந்த பணியை மேற்கொள்கிறது. இதற்காக, கோவை மாவட்டத்தில், 230 கி.மீ.,க்கு இரும்பு குழாய்கள் பதிக்கும் பணியை இந்நிறுவனம் செய்து கொண்டிருக்கிறது.

இதுவரை 65 கி.மீ.க்கு பணி முடிவடைந்தது. இந்த ஆண்டு இறுதிக்குள் குறிச்சி மற்றும் மலுமிச்சம்பட்டி பகுதிகளில், வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டம் தொடங்கும் என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றைத் தவிர்த்து, மாவட்டத்தில் வாகன எரிவாயு விநியோகிப்பதற்கு 273 சி.என்.ஜி. ஸ்டேஷன்கள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10 ஸ்டேஷன்கள் துவக்கப்பட்டுள்ளன.

இருப்பு மையம் திறப்பு இவை அனைத்துக்குமான இயற்கை எரிவாயுவை இருப்பு வைக்கும் மையமான 'சிட்டி கேட் ஸ்டேஷன்' மற்றும் 'மதர் ஸ்டேஷன்', கோவை, பிச்சனூரில் கட்டப்பட்டுள்ளது. இயற்கை எரிவாயு தேவை இந்த மையம், ஒரு மணி நேரத்துக்கு 13 ஆயிரம் க்யூபிக் மீட்டர் எரிவாயு கையாளும் திறன் கொண்டது. வரும் 2025 வரையிலான கோவையின் இயற்கை எரிவாயு தேவையை இது பூர்த்தி செய்யும். இந்த மையத்துக்கு கொச்சி முனையத்தில் இருந்து இயற்கை எரிவாயு கொண்டு வரப்படுகிறது. பிச்சனூரில் அமைந்துள்ள 'சிட்டி கேட் ஸ்டேஷன்' இயற்கை எரிவாயு இருப்பு மையத்தை, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் (பைப்லைன்ஸ்) நானாவேர் திறந்து வைத்தார்.

அடுத்த ஆண்டுக்குள் 41 மையங்கள்!

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை மேலாளர் சுரேஷ் கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் வீடுகள் மற்றும் வாகனங்களுக்கு, இயற்கை எரிவாயு தங்கு தடையின்றி கிடைப்பதற்கு, இந்த இருப்பு மையம் உதவும். அடுத்த ஆண்டுக்குள் கோவையில் 41 இயற்கை எரிவாயு விநியோக மையங்கள் துவக்கப்படும். வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு பரவலாக கிடைக்கவும், விலையை மேலும் குறைக்கவும், கூடுதலாக ஆன்லைன் சி.என்.ஜி., ஸ்டேஷன்கள் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

எரிவாயு விலை குறையும்!

கோவையில் வீடுகளுக்கு குழாய் மூலமாக கேஸ் விநியோகிக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, காஸ் விலை குறையும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர். கோவையில் தற்போது எரிவாயு இருப்பு மையம் (சிட்டி கேட் ஸ்டேஷன்) திறக்கப்பட்ட நிலையில், இயற்கை எரிவாயுவின் விலை ஐந்து ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது (ஒரு கிலோ ரூ.79.17) என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...