பெண்களுக்கான உயர்கல்வி உதவித் தொகையான, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ல் துவக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கோவை:அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் மட்டுமே பயன்பெற முடியும். பட்டம் மற்றும் முதுநிலை பட்டப் படிப்புக்கு செல்லும் அனைத்து மாணவியருக்கும், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவியருக்கு மட்டுமே, இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இதற்காக, ஆறு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து, தற்போது கல்லூரிகளில் பட்ட படிப்பில் உள்ள மாணவியரின் விபரங்களை மட்டும், உயர் கல்வித் துறை பட்டியல் எடுத்து வருகிறது.இந்த திட்டம், காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 ல் துவங்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.