கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி விபத்து - ஓட்டுநருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் வந்த விபரீதம்!

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு கார் ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் கார் நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. எனினும், காரில் வந்தவர்களுக்கு எந்த விபத்தும் ஏற்படாமல் அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


கோவை:கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர்கிருஷ்ணன். இவர் தனது உறவினர்களை அழைப்பதற்காக கோவை ரயில் நிலையத்திற்கு வந்து, உறவினர்களை அழைத்து கொண்டு மீண்டும் சென்ற போது ஆட்சியர் அலுவலகம் முன்பு திரும்பும்போது காரை ஓட்டிய கிருஷ்ணனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.



அப்போது இடது கையால் திருப்பும் போது நிலை தடுமாறி சாலை தடுப்பு சுவர் மேல் மோதியது. இது குறித்து தகவலறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காரில் வந்தவர்களை பத்திரமாக மீட்டு வேறு வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.



இதையடுத்து மீட்பு வாகனம் மூலம் கார் மீட்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...